Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் தேர்தல் ஒழுங்குமுறை நடைமுறையில் இருப்பதால், பணம் மற்றும் மதிப்புள்ள பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை தி.நகர் பகுதியில் வாகன சோதனை நடத்தியபோது சந்தேகத்திற்கிடமான ஒரு வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அதில் சோதனை செய்தபோது சுமார் ₹28 கோடி மதிப்பிலான தங்க மற்றும் வெள்ளி நகைகள் எடுத்துச் செல்லப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் காட்டப்படாததால், அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் குறித்து வருமானவரி துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அவை உரிமையாளருக்கு மீண்டும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற பறிமுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / GOKILA arumugam