Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 13 ஏப்ரல் (ஹி.ச.)
திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை
(ஏப்ரல் 15) சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் செல்லவிருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சித் தலைவருமான வே.சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்வதால் மைய மதிப்பீட்டு பணிகளுக்கும் நாளை முகாம் விடுமுறை என அறிவிக்க சார்ந்த முகாம் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணி ஆணை பெற்ற அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் உரிய நேரத்தில் தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப் பிரியா அறிவுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b