தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகம் முழுவதும் தமிழ்ப்புத்தாண்டு நாளை (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டு அரசு விடுமுறை தினம் என்பதால், நாளை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Metro trains will operate tomorrow, Sunday


சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் தமிழ்ப்புத்தாண்டு நாளை (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது.

தமிழ்ப்புத்தாண்டு அரசு விடுமுறை தினம் என்பதால், நாளை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை நாளை

(14-4-2026) .காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.

நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b