Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 13 ஏப்ரல் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம்,
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள அரேபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
அப்போது அந்த வழியாக வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் பயணம் செய்தவர் கர்நாடக மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட சோதனையில் ரூ.2 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அந்த பணம் எதற்காக கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டபோது, டில்லர் மெஷின் வாங்குவதற்காக பணம் வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், அதற்கான முறையான ஆவணங்களை வழங்க முடியாததால், தேர்தல் விதிமுறைகளின்படி அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் காலத்தில் பெரிய தொகை பணத்தை எடுத்துச் செல்லும் போது தேவையான ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN