Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி, ஏப்- 14 (ஹி.ச.)
குவாண்டம் தொழில்நுட்ப துறையில் ஆந்திரப் பிரதேசம் புதிய வரலாறு படைத்துள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக குவாண்டம் டெஸ்ட் ரெஃபரன்ஸ் வசதியை அமைத்த மாநிலமாக அது திகழ்கிறது.
உலக குவாண்டம் தினத்தை முன்னிட்டு, முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த வசதிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட ‘1எஸ் ஓபன் ஆக்சஸ் குவாண்டம் வசதி’ மற்றும் கன்னவரத்தில் உள்ள மேதா டவர்ஸில் அமைந்துள்ள ‘1க்யூ குவாண்டம் வசதி’ ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார்.
இந்த இரண்டு மையங்களும் குவாண்டம் கணினி உபகரணங்களை சோதனை செய்யும் டெஸ்ட் பெட்களாக செயல்படும்.
மைனஸ் 273 டிகிரி செல்சியஸ் என்ற மிகக் குறைந்த வெப்பநிலையிலும் செயல்படும் வகையில் இந்த வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சியின் மூலம் அமராவதி குவாண்டம் வேலிக்கு குவாண்டம் கணினி ஹார்ட்வேர் சாதனங்களை சோதனை செய்து சான்றளிக்கும் திறன் கிடைத்துள்ளது.
குவாண்டம் கணினி உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு இந்த டெஸ்ட் பெட்கள் பெரிதும் பயனளிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தொடக்க விழாவில் தேசிய குவாண்டம் மிஷன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை பிரதிநிதிகள், பல்வேறு குவாண்டம் நிறுவனங்களின் தலைவர்கள், ஐஐடி பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA