Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி , 14 ஏப்ரல் (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவில் இல் கோடைகாலத்தை முன்னிட்டு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோடைகாலத்திலும் வைகுண்ட ஏகாதசி காலத்தில் பின்பற்றப்படும் நடைமுறையை செயல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் பொதுப் பக்தர்கள் அதிகளவில் மற்றும் விரைவாக தரிசனம் செய்யும் வசதி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடை விடுமுறை காலத்தில் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், தரிசனத்தை சீராக நடத்தவும் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக கடந்த 3 ஆண்டுகளில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆய்வின் அடிப்படையில், பொதுப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களின் வசதிக்காக கூடுதல் குடிநீர் வசதி, ஓய்வு மண்டபங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA