உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச) தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சொத்து விவரங்கள் தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்த உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றம்-ல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியைச் ச
உயர்நீதிமன்றம்


சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச)

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சொத்து விவரங்கள் தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்த உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றம்-ல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் குமரவேல் தாக்கல் செய்த மனுவில், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரங்களுக்கும், 2026ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட தற்போதைய விவரங்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் ரூ.7.36 கோடி முதலீடு செய்திருப்பது சமீபத்திய வேட்பு மனுவில் குறிப்பிடப்படவில்லை என்றும், உதயநிதி ஸ்டாலின் மனைவி ரூ.2.63 கோடி முதலீடு செய்திருப்பதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, வருமானவரித்துறை மற்றும் மத்திய கார்ப்ரேட் விவகார அமைச்சகம் ஆகியவை விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam