Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.)
கேரள மாநிலத்தின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான இது மலையாளப் புத்தாண்டு தினம் விஷு எஎனும் பெயரில் கொண்டாடப்படுகிறது. இது மலையாளத்தில் 'மேடம்' மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விஷு திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள விஷு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் இன்று தெரிவித்திருப்பாதாவது:-
அனைத்து மலையாள சகோதர சகோதரிகளுக்கும் எனது இனிய விஷு புத்தாண்டுத் திருநாள் நல்வாழ்த்துகள்.
இந்த புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் புதிய தொடக்கங்களையும், வெற்றிகளையும், மகிழ்ச்சியும் அளிக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b