Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 16 ஏப்ரல் (ஹி.ச.)
நாடாளுமன்ற மக்களவையில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரைவு தொடர்பான மசோதாக்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டன.
முன்னதாக, இந்த மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கான வாக்கெடுப்பை குரல் வாக்கெடுப்பு முறையில் நடத்த முயற்சி செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
முக்கியமான மசோதாக்கள் என்பதால் குரல் வாக்கெடுப்பு முறையை தவிர்த்து, டிவிஷன் (பிரிவு) வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து டிவிஷன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாக்களை அறிமுகப்படுத்த ஆதரவாக 207 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் பரபரப்பு நிலவியது.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அவை நடவடிக்கைகள் சில நேரம் பாதிக்கப்பட்டன.
இந்த மசோதாக்கள் குறித்து அடுத்த கட்ட விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA