Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 17 ஏப்ரல் (ஹி.ச.)
விக்கிரவாண்டி பகுதியில் வனத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற லாரிகளை நிறுத்தி ஆய்வு செய்தனர்.
அப்போது, லாரிகளில் சுமார் ஒரு டன் அளவிலான செம்மரம் கடத்தப்பட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அந்த செம்மரம் மின்னணு எந்திரங்கள மத்தியில் மறைத்து எடுத்து செல்லப்பட்டிருந்தது தெரியவந்தது.
பிடிபட்ட செம்மரத்தின் மதிப்பு பல கோடி ரூபாயாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கடத்தல் எங்கு இருந்து எங்கு கொண்டு செல்லப்பட்டது, யாருக்கு அனுப்பப்பட்டது என்பதைக் குறித்து பல்வேறு கோணங்களில் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam