மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து சிக்கிம் மாநிலத்தில் பெண்கள் பேரணி
கேங்டாக், 17 ஏப்ரல் (ஹி.ச.) சிக்கிம் மாநிலம் கேங்டாக் மாவட்டத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து இன்று நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர். தியோராலியில் உள்ள டாடா ஸ்டாண்ட் என்னும் இடத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரண
Women Rally in Sikkim


கேங்டாக், 17 ஏப்ரல் (ஹி.ச.)

சிக்கிம் மாநிலம் கேங்டாக் மாவட்டத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து இன்று நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.

தியோராலியில் உள்ள டாடா ஸ்டாண்ட் என்னும் இடத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, பாணி ஹவுஸ், மெட்ரோ பாயிண்ட் மற்றும் தாரா மருத்துவமனை வழியாகச் சென்று பால்ஜோர் திடலில் நிறைவடைந்தது.

சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களும், அரசு பணியாளர்களும் மற்றும் அரசியல் ஆர்வலர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆதரவாக, பங்கேற்பாளர்கள் தேசியக் கொடியை ஏந்திச் சென்றும், முழக்கங்களை எழுப்பியும் அந்தப் பேரணியை நிறைவு செய்தனர்.

பேரணி ஏற்பாட்டளர்களின் ஒருவரான, அப்பர் புரதுக் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் காலா ராய் கூறுகையில், இந்த சட்டம் தேசத்திற்கே பெருமை என்றும், நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க சிக்கிம் பெண்கள் ஒன்று திரண்டுள்ளனர் என்றும் கூறினார்.

மேலும், மாநிலத்தின் ஆறு மாவட்டங்களிலிருந்தும் சுமார் 25,000 பெண்கள் பேரணியில் கலந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b