Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 18 ஏப்ரல் (ஹி.ச)
உலகளவில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் ரஷ்யாவின் தடைசெய்யப்பட்ட எண்ணெய்யை கடல்வழியாக வாங்க நாடுகளுக்கு தற்காலிக விலக்கு அளித்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதலின் பின்னணியில் பதற்றங்கள் அதிகரித்து விலைகள் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 11-ம் தேதி முடிவடைந்த 30 நாள் விலக்கைத் தொடர்ந்து, இந்த நீட்டிப்பு மே 16 வரை அமலில் இருக்கும்.
தற்போதைய புவிசார் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் அமெரிக்கத் தடைகளைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை முற்றிலும் தற்காலிகமானது என்றும், மீண்டும் புதுப்பிக்கப்படாது என்றும் அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விலக்கு மூலம் 10 கோடி பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க அனுமதிப்பதன் வழியாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் தற்காலிகமாக அதிகரிக்கலாம். எனினும், பிராந்திய இடையூறுகளால் ஏற்பட்ட விலை உயர்வை இது தடுக்கவில்லை.
மேலும், உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில் அந்நாட்டின் மீதான அழுத்தத்தைத் தொடர வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நட்பு நாடுகளுடனான உறவுகளில் இந்த முடிவு விரிசலை ஏற்படுத்தக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.
Hindusthan Samachar / vidya.b