சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு மே 11 ஆம் தேதி ராமநாதபுரத்தில் உள்ளூர் விடுமுறை
ராமநாதபுரம், 19 ஏப்ரல் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை
சந்தனக்கூடு திருவிழா


ராமநாதபுரம், 19 ஏப்ரல் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் வெளியிட்டுள்ளார்.

ஏர்வாடியில் உள்ள செய்யது இப்ராஹிம் ஷஹீது ஒலியுள்ள தர்கா, தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து தரிசிக்கும் முக்கிய ஆன்மிக மையமாக விளங்குகிறது.

இங்கு நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு தர்காவை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமாக உள்ளது.

இந்த ஆண்டுக்கான திருவிழா மே மாதம் 10ஆம் தேதி பிற்பகலில் தொடங்கி, மே 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த இரண்டு நாட்களில் ஏர்வாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் பெருமளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் இந்த உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது.

இந்த விடுமுறை ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அவசர சேவைகள் வழக்கம்போல செயல்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

திருவிழா காலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்கு உள்ளிட்டவற்றை வலுப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

பக்தர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் திருவிழாவில் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN