அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோவிலுக்கு அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி வருகை
அயோத்தி, 02 ஏப்ரல் (ஹி.ச.) அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி, அயோத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோவிலுக்கு இன்று வருகை தந்து, ராம்லல்லாவை தரிசனம் செய்தார். வருகையின் போது, அவர் கோவிலில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு, அங்கு நடைபெற்ற சடங்கு
அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோவிலுக்கு அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி வருகை


அயோத்தி, 02 ஏப்ரல் (ஹி.ச.)

அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி, அயோத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோவிலுக்கு இன்று வருகை தந்து, ராம்லல்லாவை தரிசனம் செய்தார்.

வருகையின் போது, அவர் கோவிலில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு, அங்கு நடைபெற்ற சடங்குகளிலும் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அயோத்தியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ராமபிரானை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த உணர்வுபூர்வமானதும் பெருமைக்குரியதுமான தருணமாகும்.

இக்கோவில் பக்தியின் மையமாக மட்டுமன்றி, இந்தியாவின் கலாச்சாரம், ஒற்றுமை மற்றும் தன்னம்பிக்கையின் சின்னமாகவும் விளங்குகிறது.

ஸ்ரீ ராமபிரானின் உயரிய கொள்கைகள் உண்மை மற்றும் கடமையின் பாதையில் நாம் முன்னேறத் தூண்டுகின்றன. அவரின் அருள் அனைவர்மீதும் பொழிய வேண்டும் என்றும், நாடு தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.

செயற்கை நுண்ணறிவு அதிகரித்து வரும் இக்காலத்தில், நமது பாரம்பரிய குருகுலக் கல்வி மரபை பாதுகாக்க அதானி அறக்கட்டளை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என தெரிவித்தார்.

ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோவில், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை மற்றும் பக்தியின் முக்கிய மையமாகத் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM