Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 02 ஏப்ரல் (ஹி.ச.)
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வளாகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் வசந்த உற்சவம் இந்த ஆண்டு பக்தி உற்சாகத்துடன் நிறைவடைந்தது.
3 நாட்கள் நடைபெற்ற இந்த உற்சவத்தில், மலையப்பசாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு வாசந்த மண்டபத்தில் ஸ்நாபன திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோடைக்கால வெப்பத்திலிருந்து தெய்வத்திற்கு சாந்தி அளிக்கும் நோக்கில் இந்த விழா நடத்தப்படுகிறது.
இறுதிநாளில், ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணர், அஞ்சனேயர் உள்ளிட்ட தெய்வங்களின் சிறப்பு ஊர்வலம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையான் தரிசனம் செய்தனர்.
விழா சிறப்பாக நடைபெற தேவஸ்தானம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Hindusthan Samachar / GOKILA arumugam