Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.)
பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் & சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சரத் பாபு மற்றும் இணை தயாரிப்பு சூர்யா தேவி இணைந்து
தயாரிப்பில் காளி வெங்கட் நடிப்பில் அறிமுக இயக்குநர் பா.விஜய் கார்த்திக்கேயன் இயக்கத்தில் தயாராகும் ' புரொடக்ஷன் நம்பர் 3' படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் பா.விஜய் கார்த்திக்கேயன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் காளி வெங்கட், ரேஷ்மா முரளிதரன், ஜென்சன் திவாகர், ஆடுகளம் நரேன், மைம் கோபி, ஜெயபிரகாஷ். விஜே பாரு, வினோதினி, சரத் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். பாடல்கள் விவேக், கார்த்திக் நேத்தா, கவிஞர் சாரதி, உமாதேவி ஆகியோர் எழுதியுள்ளனர்.
படத்தொகுப்பு பணிகளை சக்தி திரு கவனிக்க, கலை இயக்கத்தை ஹாசினி மேற்கொள்கிறார்.
சண்டை பயிற்சியை ராம்போ விமல், ஆடை வடிவமைப்பு கவிதா, நடன அமைப்பை ராதிகா கையாள்கிறார்கள்.
குடும்ப திரைப்படமாக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் & சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சரத் பாபு மற்றும் இணை தயாரிப்பு சூர்யா தேவி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
1995 அரசுப்பள்ளியில் படிக்கும் தனது மகனை தனியார் பள்ளியில் படிக்க வைக்க போராடும் ஒரு தந்தையின் கதையை மையப்படுத்தி குடும்ப உணர்வுகளை கொண்டு உருவாக இருக்கிறது.
குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் பார்க்க கூடியதாக இருக்க இப்படம் தயாராகிறது.
இதற்காக சிவகங்கை மற்றும் சென்னையிலும் படப்பிடிப்பு நடத்துகிறோம் என்றார்.
Hindusthan Samachar / Durai.J