தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 234 தொகுதி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியோடு முடிவடைந்தது
சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில்,இன்று மாலை 6 மணியோடு முடிவடைந்தது. இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழக ம
வி


சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில்,இன்று மாலை 6 மணியோடு முடிவடைந்தது.

இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க கட்சியின் தலைவர் விஜய் உட்பட முக்கிய கட்சி தலைவர்கள் கடந்த ஒரு மாத காலமாக பிரச்சாரம் மேற்க்கொண்டனர்.

பிரச்சாரத்தின் நிறைவு நாளான இன்று முக்கிய தலைவர் உட்பட அனைவரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு சூறாவளி பிரச்சாரம் செய்தனர் .

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

த.வெ.க தலைவர் விஜய் சென்னை நந்தனத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றி தனது பிரச்சாரத்தை முடித்தார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி பிரச்சாரத்தை முடித்தார்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் உரையாற்றி பிரச்சாரத்தை முடித்தனர்.

இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரை, பொதுக் கூட்டம், சாலை வலம் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது,

என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

அதில்,மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 126-இன் கீழ் ஏப்ரல் 21 மாலை 6 மணிக்கு மேல் வாக்குப்பதிவு முடியும் வரை (ஏப்ரல் 23) திரைப்படம், தொலைக்காட்சி, ரேடியோ, வாட்ஸ்-ஆப், முகநூல், எக்ஸ் போன்ற எவ்வித மின்னணு சாதனங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பரப்புரையில் ஈடுபட கூடாது.

இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம்

தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.

யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது.

குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

பொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது.

இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 21.4.2026 அன்று மாலை 6.00 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை கண்டறியப்படும்.

வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், 21.4.2026 செயல் திறனற்றதாகி விடும்.

அன்று மாலை 6.00 மணி முதல்

சட்டமன்றத் தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதியானது அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்,

தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான தொகுதிக்கு ஒரு வாகனம் மற்றும் சட்டமன்ற தேர்தல் முகவர் அல்லது பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்,ஆகியவை,தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும்.

வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது.

இது 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.

இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்கள்/அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம்.

தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.

என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

Hindusthan Samachar / Durai.J