Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 21 ஏப்ரல் (ஹி.ச.)
தெலங்கானா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதி குறித்து திறந்தவெளி விவாதத்திற்கு வருமாறு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆகியோருக்கு மாநில பா.ஜ.க தலைவர் ராமகிருஷ்ண ரெட்டி மற்றும் ராமச்சந்தர ராவ் சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு தெலங்கானா மாநிலத்திற்கு ரூ.12 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளது.
குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசு அளித்த நிதி பற்றிய உண்மைகளை மக்கள் முன் வைக்க தாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம்.
மத்திய நிதி தொடர்பாக விவாதிக்க ரேவந்த் ரெட்டி மற்றும் சந்திரசேகர் ராவ் வேண்டுமானாலும் வரட்டும்; அவர்கள் தயாராக இருக்கும் நேரத்தை தெரிவித்தால் தாமும் வருவதாக தெரிவித்தார்.
பி.ஆர்.எஸ். மூத்த தலைவர் ஹரிஷ் ராவ் டெல்லிக்கு சென்றது காளேஸ்வரம் திட்டம் தொடர்பான சட்ட ஆலோசனைக்காக மட்டுமே என்றும், தங்களுடன் எந்தவித அரசியல் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
காளேஸ்வரம் திட்டத்தில் முழுமையான சி.பி.ஐ. விசாரணை கோராமல், சில அணைகளில் மட்டுமே விசாரணை கோருவது இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மக்கள் பணம் பயன்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், ரேவந்த் ரெட்டி மற்றும் கே. சந்திரசேகர் ராவ் ஆகியோர் பா.ஜ.க வளர்ச்சியை தடுக்கவே கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் பி.ஆர்.எஸ்., தற்போது காங்கிரஸ் ஆட்சி ஆகியவை மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்தியுள்ளன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA