Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 22 ஏப்ரல் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் 400 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது.
மேற்கு ரத வீதியில் அமைந்துள்ள இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சங்கு, சக்கரம், கருடாழ்வார் படம் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கோயில் உதவி ஆணையர் செந்தில் குமார், கண்காணிப்பாளர் அழகர் சாமி, கந்த விலாஸ் உரிமையாளர் செல்வ குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவையொட்டி, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப்ரல் 28-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம், ஏப்.30-ம் தேதி காலை 8 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற உள்ளது. மே 1-ம் கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறும்.
அன்று சித்ரா பவுர்ணமியையொட்டி பெரிய நாயகியம்மன் கோயிலில் இருந்து காலை 8 மணிக்கு மேல் திருஆவினன்குடி கோயிலுக்கு 108 பால் குடங்கள் எடுத்து வருதல், அன்று இரவு 8 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளித் தேரில் வீதியுலா நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / vidya.b