Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
மாலை 5 மணி நிலவரப்படி 82.24% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக கரூரில் 89.32% வாக்குகள் பதிவாகியுள்ளன.
குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 73.44% வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னையில் மாலை 5 மணி நிலவரப்படி 81.34% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இவற்றில் தொகுதி வாரியாகப் பார்த்தால் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் அதிகபட்சமாக 87.12% வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 72.79% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இதுவரை 4.71 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
இது 2021 தேர்தல் வாக்குப்பதிவை விட 19.18% அதிகமாகும்.
Hindusthan Samachar / vidya.b