அனகாப்பள்ளியில் ரூ.5,400 கோடி திட்டங்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நட்டினார்
அமராவதி, 23 ஏப்ரல் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு இன்று அனகாப்பள்ளி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ராம்பில்லி பகுதியில் அமைக்கப்பட உள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரினியூ எனர்ஜி
A


அமராவதி, 23 ஏப்ரல் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு இன்று அனகாப்பள்ளி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ராம்பில்லி பகுதியில் அமைக்கப்பட உள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ரினியூ எனர்ஜி குளோபஸ் நிறுவனம் ரூ.5,400 கோடி முதலீட்டில் இரண்டு முக்கிய திட்டங்களை அமைக்கிறது.

இதில் ரூ.4,200 கோடி செலவில் 6.5 கிகாவாட் திறன் கொண்ட சோலார் இங்காட்–வேஃபர் உற்பத்தி அலகும், ரூ.1,200 கோடி மதிப்பில் 125 மெகாவாட் திறன் கொண்ட ஹைபிரிட் கேப்டிவ் புதுப்பிக்கத்தக்க மின்சார திட்டமும் அடங்கும்.

இந்த திட்டங்கள் அடுத்த 2 ஆண்டுகளில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்த பின்னர், நேரடி மற்றும் மறைமுகமாக சுமார் 2,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் மூலம் அனகாப்பள்ளி மாவட்டம் தொழில்துறையில் மேலும் முன்னேற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் இன்று காலை 9.30 மணிக்கு அமராவதியில் இருந்து புறப்பட்டு, காலை 11.10 மணிக்கு ஜெட். சிந்துவை சென்றடைந்து, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA