Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 25 ஏப்ரல் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சேர்ந்த பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலை கேட்ட இளைஞருக்கு ‘ஆட்டோ வாங்கித் தருகிறேன்’ என்று முதலமைச்சர் கூறியதாக தவறான தகவல் பரவுமாறு வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அமைச்சர் நாரா லோகேஷ் வெளியிட்ட அறிக்கையில் கடும் ஆவேசம் தெரிவித்தார்.
இந்த வீடியோ முற்றிலும் தவறான பிரசாரம் என்றும், இரண்டு வேறு சம்பவங்களை இணைத்து தவறாக உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இத்தகைய செயல்களுக்கு வை.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியே காரணம் எனவும் குற்றம்சாட்டினார்.
மேலும், கடந்த மார்ச் 30ஆம் தேதி நாயுடுபேட்டையில் நடந்த நிகழ்ச்சியில், ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர், அவரது கணவர் ஆட்டோ ஓட்டுநராக இருப்பதால் பேட்டரி ஆட்டோ வாங்கித் தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், வெளியே வந்தபோது மற்றொரு பெண் தனது படித்த மகனுக்கு வேலை கிடைக்க உதவுமாறு கோரிக்கை வைத்தார்.
இந்த இரண்டு தனித்தனியான நிகழ்வுகளை ஒன்றாக இணைத்து, தவறான அர்த்தம் வரும் வகையில் வீடியோ எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே விவகாரம் குறித்து ஏற்கனவே மாநில அரசின் ஃபாக்ட்-செக் பிரிவு விளக்கம் அளித்திருந்த போதிலும், மீண்டும் அந்த வீடியோவை வைரலாக்குவது திட்டமிட்ட தவறான பிரசாரம் என அமைச்சர் லோகேஷ் தெரிவித்தார்.
இத்தகைய தவறான தகவல் பரப்புவோருக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA