பழனி கோயிலுக்கு பேட்டரி வாகனங்கள் நன்கொடையாக வழங்கிய பக்தர்கள்
திண்டுக்கல், 26 ஏப்ரல் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கிரிவலப் பாதையில் பக்தர்களின் கார்கள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கிரிவலப் பாதையில் உள்ள ரோப் கார் நிலையம், வின்ச் நிலை
EV Van


திண்டுக்கல், 26 ஏப்ரல் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கிரிவலப் பாதையில் பக்தர்களின் கார்கள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

கிரிவலப் பாதையில் உள்ள ரோப் கார் நிலையம், வின்ச் நிலையம் , பாத விநாயகர் கோவில் மற்றும் பிற கோயில்களுக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக கோயில் நிர்வாகம் பேட்டரி கார்களை கட்டணமில்லாமல் இயக்கி வருகிறது.

மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் பேட்டரி வாகனத்தில் ஏறி கிரிவலப் பாதையில் எளிதாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் டிவிஎஸ் நிறுவனம் சார்பில் 23 பேர் அமர்ந்து செல்லும் வகையில் பேட்டரி வாகனம் புதுச்சேரியைச் சேர்ந்த வேல்முருகன் மற்றும் குகன் என்கின்ற முருக பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது.

பாத விநாயகர் கோயில் முன்பு பேட்டரி வாகனம் பூஜை செய்யப்பட்டு பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட்டது.

இதன் மூலம் மலையடிவாரத்தில் 38 பேட்டரி வாகனங்கள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN