Enter your Email Address to subscribe to our newsletters

இந்தியா, 27 ஏப்ரல் (ஹி.ச.)
இந்தியாவின்,நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் இருக்கும் லோங்வா கிராமம்,சரியாக இந்தியா மற்றும் மியான்மர் நாட்டின் எல்லைக்கோட்டின் மீது அமைந்துள்ளது.
இந்தக் கிராமத்தின் சில ஆச்சரியமான உண்மைகள்:
சமையல் மியான்மரில்... தூக்கம் இந்தியாவில்: இங்குள்ள கிராமத் தலைவரின் வீடு சரியாக எல்லையைப் பிரிக்கிறது.
அவர் வீட்டில் சமையலறை மியான்மர் பகுதியிலும், படுக்கையறை இந்தியப் பகுதியிலும் இருக்கிறது.
இரட்டை குடியுரிமை:
இங்கு வாழும் 'கொன்யாக்' பழங்குடி மக்களுக்கு இந்தியா மற்றும் மியான்மர் என இரண்டு நாடுகளின் குடியுரிமையும் உள்ளது.
விசா தேவையில்லை:
எல்லைக்கோடுகள் இவர்களைப் பிரிப்பதில்லை.
இரு நாடுகளுக்குள்ளும் இவர்கள் தடையின்றி சென்று வரலாம்; இதற்கு பாஸ்போர்ட்டோ, விசாவோ தேவையில்லை.
தலை வேட்டையர்கள்:
ஒரு காலத்தில் என்று அழைக்கப்பட்ட இவர்கள், இன்று மிகச்சிறந்த கைவினைஞர்களாகவும், விவசாயிகளாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
எல்லைகள் மனிதர்களைப் பிரித்தாலும், அன்பாலும் கலாச்சாரத்தாலும் இன்றும் ஒன்றிணைந்து வாழும் லோங்வா மக்கள் ஒரு மிகப்பெரிய அதிசயம்.
Hindusthan Samachar / Durai.J