ரேவந்த் ஆட்சியில் மீண்டும் மும்பை, துபாய் குடிபெயர்வே நிலை உருவாகும் – சதீஷ் ரெட்டி குற்றச்சாட்டு
ஹைதராபாத், 28 ஏப்ரல் (ஹி.ச.) தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு மாநிலத்தின் மரியாதையை குலைத்து வருவதாக ரெட்கோ முன்னாள் தலைவர் சதீஷ் ரெட்டி குற்றம்சாட்டினார் அவர் வெளியிட்ட அறிக்கையில். இதுகுறித்து அவர் கூறியதாவது:– முன்னாள் மு
T


ஹைதராபாத், 28 ஏப்ரல் (ஹி.ச.)

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு மாநிலத்தின் மரியாதையை குலைத்து வருவதாக ரெட்கோ முன்னாள் தலைவர் சதீஷ் ரெட்டி குற்றம்சாட்டினார் அவர் வெளியிட்ட அறிக்கையில்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்.) ஆட்சியில் தெலங்கானா அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் பெற்று நாட்டில் முன்னணி மாநிலமாக இருந்தது.

ஆனால் தற்போதைய ஆட்சியில் மாநிலம் வளர்ச்சி பாதையில் இருந்து விலகி, வீழ்ச்சி நோக்கில் சென்று வருகிறது.

வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முன்னிலை வகித்த தெலங்கானா, தற்போது வேலைஇல்லாதோரின் எண்ணிக்கையில் முன்னணியில் தள்ளப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட கணக்குகளின்படி, 2025–26 நிதியாண்டில் மாநிலத்தின் வேலைஇல்லா விகிதம் 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2022 ஜனவரியில் இது 0.7 சதவீதமாக இருந்தது.

பிஆர்எஸ் ஆட்சியில் முதலீடுகள் அதிகரித்து, வேலைவாய்ப்புகள் உருவாகின.

ஆனால் தற்போது வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதால் வேலைஇல்லா விகிதம் அதிகரித்துள்ளது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் அரசு கவனம் செலுத்தவில்லை.

கொரோனா பரவலின் உச்சக்கட்ட காலத்திலும் வேலைஇல்லா விகிதம் 5.8 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது எந்த அவசர சூழலும் இல்லாமல் 8.9 சதவீதமாக உயர்ந்திருப்பது கவலைக்கிடமானது.

காங்கிரஸ் அரசு ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கியதாக கூறி வருகிறது. அவை எங்கே உள்ளன என்பதை விளக்க வேண்டும்.

டாவோஸ் மாநாட்டில் முதலீடுகள் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கூறிய வாக்குறுதிகளும் நிறைவேறவில்லை.

ஏஐ மாநாடு, ‘பியூச்சர் சிட்டி’ போன்ற திட்டங்களுக்காக கோடிக்கணக்கில் செலவிடப்பட்டும், அதனால் உருவான வேலைவாய்ப்புகள் எதுவும் காணப்படவில்லை. இதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும்.

தற்போதைய நிலை தொடர்ந்தால், வேலைவாய்ப்பு இல்லாமல் மக்கள் மீண்டும் மும்பை, துபாய் போன்ற இடங்களுக்கு குடிபெயர வேண்டிய சூழல் உருவாகும்.

எனவே, காங்கிரஸ் அரசு உண்மையை மக்களிடம் வெளிப்படுத்தி, மாநிலத்தின் நிலை குறித்து விளக்கம் அளித்து மன்னிப்பு கோர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA