Enter your Email Address to subscribe to our newsletters

பால்கர், 29 ஏப்ரல் (ஹி.ச.)
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் மும்பையில் இருந்து குஜராத் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று நள்ளிரவு நேரத்தில் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
இதில் காரின் கதவுகள் பூட்டிக்கொண்டதால் உள்ளே இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நெடுஞ்சாலையில் நின்றிருந்த இரண்டு லாரி ஓட்டுநர்களின் உதவியுடன், காரின் இன்ஜினில் இருந்து புகை வெளியேறத் தொடங்கிய நிலையில் மூவரும் பத்திரமாக வெளியே இழுக்கப்பட்டனர்.
மீட்புப் பணி முடிந்த சில நொடிகளிலேயே கார் தீப்பிடித்தது. தீயணைப்பான்கள் மூலம் தீயை அணைக்க போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் முயன்றபோதும், தீ மேலும் பரவி கார் முற்றிலும் எரிந்து நாசமானதாக மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரி கூறினார்.
மீட்கப்பட்ட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே மருத்துவக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்ட பின்னர், அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக, பரபரப்பான மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b