Enter your Email Address to subscribe to our newsletters

சண்டிகர் , 29 ஏப்ரல் (ஹி.ச.)
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற 40-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது.
ஆர்யா 29 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பிரபாஸிரான் சிங் அரைசதம் அடித்தார்.
மேலும் ஸ்டோனேஸ் 22 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது.
பின்னர் 223 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
தொடக்க வீரராக விளையாடிய சூரிய வான்சி 16 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அணிக்கு அதிரடி தொடக்கத்தை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து ஜெய் ஸ்வால் 51 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்தார். கேப்டன் ரியான் பராக் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய சேரிரா மற்றும் இம்பேக்ட் பிளேயராக வந்த டுபே இணைந்து அதிரடியாக விளையாடினர்.
இந்த ஜோடி அணியை வெற்றிக்குத் தள்ளியது.
இறுதியில் 19.2 ஓவர்களில் இலக்கை எட்டிய ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி முக்கிய முன்னிலை பெற்றதுடன், இந்த சீசனில் பஞ்சாப் அணி தனது முதல் தோல்வியை சந்தித்தது.
பெரெய்ரா 52 ரன்களுடனும், சுபம் துபே 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA