Enter your Email Address to subscribe to our newsletters

வாரணாசி, 29 ஏப்ரல் (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு இன்று வருகை தந்தார். பிரதமரை வரவேற்க லஹுராபீர் சந்திப்பில் திரண்ட ஏராளமான மக்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர்.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார். நகரில் முக்கிய சாலை பேரணியையும் பிரதமர் நடத்த திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து பாஜக எம்எல்ஏ ரவீந்திர ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பிரதமர் மோடி காசிக்கு வரும் ஒவ்வொரு முறையும், புறப்படுவதற்கு முன் புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதாக அறிவிப்பார். இன்று அவர் காசி விஸ்வநாதர் பாபாவின் ஆசியைப் பெற வந்துள்ளார். அவர் வருகை தரும் செய்தி பரவியதும், வாரணாசி மக்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், அவரைக் காணவும் வாழ்த்தவும் சாலைகளில் திரண்டனர் என்று கூறினார்.
இதனிடையே, 594 கிலோமீட்டர் நீளமுள்ள கங்கா விரைவுச் சாலையை பிரதமர் மோடி இன்று மீரட்டில் தொடங்கி வைக்க உள்ளார்.
36,230 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த ஆறு வழி பசுமை விரைவுச் சாலை, எட்டு வழிச்சாலையாக விரிவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மீரட், ஹாப்பூர், புலந்த்ஷஹர், அம்ரோஹா, சம்பல், பதாவுன், ஷாஜகான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய 12 மாவட்டங்கள் வழியாக இந்த விரைவுச் சாலை செல்கிறது.
மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசம் முழுவதும் தடையற்ற அதிவேக இணைப்பை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b