Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 29 ஏப்ரல் (ஹி.ச.)
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு இனி எதிர்காலமே இல்லை என்றும், பசுமை எரிசக்தியில் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும் துறைக்கு வாகன உற்பத்தியாளர்கள் மாற வேண்டும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி வலியுறுத்தினார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:–
பெட்ரோல், டீசல் வாகனங்கள் இறக்குமதி செலவு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகிய அம்சங்களில் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
எனவே உயிரி எரிபொருட்கள், சி.என்.ஜி., எல்.என்.ஜி. மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற மாற்று எரிபொருட்களை நோக்கி வாகன உற்பத்தியாளர்கள் திரும்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மின்சார பேருந்துகள் தேவை அதிகரிப்பு
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 70 ஆயிரம் பேருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் அடுத்த 3 ஆண்டுகளில் மின்சார பேருந்துகளுக்கான தேவை மட்டும் ஒன்றரை லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைட்ரஜன் வாகனங்கள்
டாட்டா மோட்டார்ஸ் , வாழ்வோ , அசோகா லைலாண்ட் மற்றும் & மகேந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஹைட்ரஜன் எரிபொருள் தொடர்பான சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது 10 வழித்தடங்களில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் லாரிகள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஹைட்ரஜன்தான் எதிர்காலத்தின் முக்கிய எரிபொருளாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA