மேற்கு வங்காளத்தில் 2வது கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்
கொல்கத்தா, 29 ஏப்ரல் (ஹி.ச.) மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலின் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறும். மேற்கு வங்காளத்தின் 7 மாவட்டங்களில் உள்ள 142 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்க
மேற்கு வங்காளத்தில் 2வது கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்


கொல்கத்தா, 29 ஏப்ரல் (ஹி.ச.)

மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலின் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறும்.

மேற்கு வங்காளத்தின் 7 மாவட்டங்களில் உள்ள 142 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இன்று சுமார் 3.22 கோடி வாக்காளர்கள், 1,448 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளனர்.

எங்கு எத்தனை தொகுதிகள்?

வட 24 பர்கானாஸ் (33), தென் 24 பர்கானாஸ் (31), ஹூ்ளி (18), நடியா (17), ஹாவ்ரா (16), கிழக்கு பர்தமான் (16), கொல்கத்தா (11) ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோருக்கிடையிலான போட்டியால் பவானிபூர் தொகுதி இந்த கட்டத்தின் முக்கிய கவன ஈர்ப்பாக உள்ளது.

டிஎம்சி அரசின் முக்கிய அமைச்சர்களான ஃபிர்ஹாத் ஹகீம், அரூப் பிஸ்வாஸ் மற்றும் பிரத்தியா பாசு ஆகியோரின் தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வெளிப்படைத்தன்மைக்காக இந்த கட்டத்தில் உள்ள அனைத்து 41,001 வாக்குச்சாவடிகளிலும் வெப் காஸ்டிங் வசதி செய்யப்பட்டு உள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும். மாலை 6:30க்கு பிறகு எக்சிட் போல்களின் முடிவுகள் வெளியிடப்படும்.

மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது.

அப்போது மாநில வரலாற்றிலேயே அதிகபட்சமாக 93.19% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும்.

Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV