அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் வெப்ப அலை நாட்கள் அதிகரிப்பு - புதிய ஆய்வு எச்சரிக்கை
புதுடெல்லி, 30 ஏப்ரல் (ஹி.ச.) இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் வெப்ப அலைகளின் தாக்கம் கணிசமாக அதிகரிக்கும் என புதிய ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, ஆண்டுதோறும் வெப்ப அலை நிலவும் நாட்களின் எண்ணிக்கை தற்போதைய நிலையை விட குறிப்பிடத்தக்க அள
வெயில்


புதுடெல்லி, 30 ஏப்ரல் (ஹி.ச.)

இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் வெப்ப அலைகளின் தாக்கம் கணிசமாக அதிகரிக்கும் என புதிய ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, ஆண்டுதோறும் வெப்ப அலை நிலவும் நாட்களின் எண்ணிக்கை தற்போதைய நிலையை விட குறிப்பிடத்தக்க அளவில் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Council on Energy, Environment and Water (CEEW) வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி,

தற்போது ஆண்டுக்கு சராசரியாக 10 முதல் 30 நாட்கள் வரை வெப்ப அலை பதிவாகும் பல பகுதிகளில், அடுத்த இரண்டு தசாப்தங்களில் இது 15 முதல் 40 நாட்கள் வரை அதிகரிக்கக்கூடும்.

இந்த வெப்ப அலை அதிகரிப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களின் அன்றாட வாழ்க்கை, உடல்நலம், விவசாயம், நீர்வள மேலாண்மை மற்றும் மின்சார தேவைகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை நாட்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

வெப்பநிலை உயர்வு காரணமாக, முதியவர்கள், குழந்தைகள், வெளிப்புறத் தொழிலாளர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் இருப்பார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனை சமாளிக்க, நகர்ப்புறங்களில் பசுமைப் பரப்பை அதிகரித்தல், குடிநீர் வசதிகளை மேம்படுத்தல், வெப்ப அலை முன்எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், வெப்ப அலைகளை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P