கோடை வெயிலில் சென்னைக்கு நிம்மதி- 5 ஏரிகளில் 66.13% நீர் இருப்பு
சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.) கடும் கோடை வெயில் நிலவி வரும் நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய 5 ஏரிகளில் 66.13% அளவுக்கு நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி மற்றும் கண
செம்பரம்பாக்கம் ஏரி


சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)

கடும் கோடை வெயில் நிலவி வரும் நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய 5 ஏரிகளில் 66.13% அளவுக்கு நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி மற்றும் கண்ணன்கோட்டை ஏரி ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.757 டி.எம்.சி. ஆகும். தற்போது 7.77 டி.எம்.சி. நீர் இருப்பு பதிவாகியுள்ளது.

இந்த ஏரிகளிலிருந்து தினசரி நகரின் குடிநீர் தேவைக்காக நீர் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் நீர் தேவைகள் அதிகரிக்கும் நிலையில், உள்ள நீர் இருப்பு அடுத்த சில மாதங்களுக்கு தேவையை பூர்த்தி செய்ய உதவும் என அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.

மேலும், மழை குறைவாக இருந்தாலும், கடந்த வடகிழக்கு பருவமழையில் கிடைத்த நீர்சேமிப்பு காரணமாக ஏரிகளில் தண்ணீர் நிலை சீராக உள்ளது.

இருப்பினும், நீர் பயன்படுத்தலில் சிக்கனத்தை கடைபிடிக்க பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நகரின் சில பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால், ஏரிநீரின் மீது சார்பு அதிகரித்துள்ளது.

அதனால், நீர் விநியோகம் தடையின்றி நடைபெற அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam