Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)
கோடை விடுமுறை கால நெரிசலைச் சமாளிக்க சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி, தாம்பரம் - தென்காசி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்த ரயில் கால அட்டவணை விவரங்கள் பின்வருமாறு:
1. எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06045/06046):
சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வியாழக்கிழமை) இரவு 11:50 மணிக்குப் புறப்படும் ரயில், நாளை மதியம் 1 மணிக்குக் கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து மே 3-ஆம் தேதி இரவு 11:25 மணிக்குப் புறப்படும் ரயில், மறுநாள் காலை 11:30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
2. தாம்பரம் - தென்காசி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06089/06090):
தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10:30 மணிக்குப் புறப்படும் ரயில், நாளை காலை 10 மணிக்குத் தென்காசி சென்றடையும்.
மறுமார்க்கமாக, செங்கோட்டையிலிருந்து மே 3-ஆம் தேதி இரவு 9:30 மணிக்குப் புறப்படும் ரயில், மறுநாள் காலை 10:30 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.
3. ஈரோடு/போத்தனூர் - சென்னை சென்ட்ரல்:
ஈரோடு - சென்னை (06026): இன்று காலை 9:20 மணிக்குப் புறப்பட்டு மாலை 5 மணிக்குச் சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
சென்னை - போத்தனூர் (06025): இன்று மாலை 6:45 மணிக்குப் புறப்பட்டு நாளை அதிகாலை 5:15 மணிக்குப் போத்தனூர் சென்றடையும்.
போத்தனூர் - சென்னை (06028/06027): மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் போத்தனூரிலிருந்து காலை 7:40 மணிக்கும், மறுமார்க்கமாகச் சென்னையிலிருந்து மாலை 6:45 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b