ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் தீ விபத்து- 10 ஊழியர்கள் காயம்
மும்பை, 05 ஏப்ரல் (ஹி.ச.) அரேபியக் கடலில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மும்பை ஹை எண்ணெய் களத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பணியாளர்கள் காயமடைந்தனர். மும்பை ஹை வளாகத்தில் உள்ள SHP பிளாட்ஃபார்மில் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓ.
தீ விபத்து


மும்பை, 05 ஏப்ரல் (ஹி.ச.)

அரேபியக் கடலில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மும்பை ஹை எண்ணெய் களத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பணியாளர்கள் காயமடைந்தனர்.

மும்பை ஹை வளாகத்தில் உள்ள SHP பிளாட்ஃபார்மில் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.என்.ஜி.சி. அவசர குழுக்கள் உடனடியாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 10 பேரும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்; அவர்கள் அனைவரும் நிலைமை ஸ்திரமாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தீ அணைக்கப்பட்ட பிறகு அந்த பிளாட்ஃபார்மில் பணிகள் மீண்டும் வழக்கம்போல தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam