Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.)
கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, சிலுவையில் அறையப்பட்ட தியாக மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை நினைவுகூரும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈஸ்டர் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b