நடிகர் ஜெய் பிறந்தநாளில், பாரதியாரின் வரிகளில், “சட்டென்று மாறுது வானிலை” 3 வது சிங்கிள் வெளியீடு!
சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச.) நடிகர் ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படமான “சட்டென்று மாறுது வானிலை” படக்குழு ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக, பாரதியார் வரிகளில், மூன்றாவது சிங்கிள் பாடலை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளது. சமூக அக்கறை மற்றும் அரசிய
வி


சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச.)

நடிகர் ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படமான “சட்டென்று மாறுது வானிலை” படக்குழு ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக, பாரதியார் வரிகளில், மூன்றாவது சிங்கிள் பாடலை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளது.

சமூக அக்கறை மற்றும் அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ள இந்தப் பாடல் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பாரதியாரின் புகழ்பெற்ற வரிகளான “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற பாடல் வரிகளை அடிப்படையாகக் கொண்டு, இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மதுரை ராப் இசைக்குழு மதுரை சோல்ட்ஜர்ஸுடன் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார்.

சமூக அவலங்களையும், தற்போதைய நிலைமைகளையும் ஆவேசமாக வெளிப்படுத்தும் இந்தப் பாடலை கிரிஷ் கோபால கிருஷ்ணன் மற்றும் மதுரை சோல்ட்ஜர்ஸ் இணைந்து பாடியுள்ளனர்.

தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், சமூக விழிப்புணர்வை தூண்டும் விதமாக இந்தப் பாடல் உருவாகியிருப்பது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BV Production நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்கும் இப்படம், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாக பேசும், புதுமையான ரொமான்டிக் திரில்லராக புதிய முயற்சியாக உருவாகியுள்ளது. நாயகனாக ஜெய் நடித்துள்ள இப்படத்தில், நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகிபாபு, கருடா ராம், ஶ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமூகத்தின் கடுமையான உண்மைகளை பிரதிபலிப்பதாக பாராட்டப்பட்டன.

மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது.

மேலும், நாட்டில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் தைரியமாக பேசவுள்ளது.

இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்,

ஒளிப்பதிவை ரிச்சர்ட் M நாதன் மேற்கொண்டுள்ளார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட்சன், கலை இயக்கம் S கண்ணன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளனர்.

முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிறகு வரும் மே மாதத்தில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

Hindusthan Samachar / Durai.J