சண்டிகரின் முக்கிய இடங்களை குறிவைத்து மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்
சண்டிகர், 06 ஏப்ரல் (ஹி.ச.) சண்டிகர் நகரின் பல முக்கிய இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெறவுள்ளதாக வந்த மின்னஞ்சல் மிரட்டல், இன்று நகரம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு எச்சரிக்கையை ஏற்படுத்தியது. மேயர் அலுவலகம், தலைமைச் செயலகம், சண்டிகர் பல்கல
சண்டிகரின்  முக்கிய இடங்களை குறிவைத்து மின்னஞ்சலில்  வெடிகுண்டு மிரட்டல்


சண்டிகர், 06 ஏப்ரல் (ஹி.ச.)

சண்டிகர் நகரின் பல முக்கிய இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெறவுள்ளதாக வந்த மின்னஞ்சல் மிரட்டல், இன்று நகரம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு எச்சரிக்கையை ஏற்படுத்தியது.

மேயர் அலுவலகம், தலைமைச் செயலகம், சண்டிகர் பல்கலைக்கழகம், காந்தி பவன் மற்றும் பல்வேறு பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாக அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மின்னஞ்சலில், தாக்குதல் நடைபெறக்கூடிய நேரங்களும் குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி, பிற்பகல் 1:11 மணிக்கு பள்ளிகள், 2:11 மணிக்கு மேயர் அலுவலகம், 3:11 மணிக்கு தலைமைச் செயலகம் ஆகியவை குறிவைக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரவு 9:11 மணிக்கு சண்டிகர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காந்தி பவனில் கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்னஞ்சலில் இடம்பெற்றிருந்த, காலிஸ்தானியர்கள் குழந்தைகளுக்கு எதிரானவர்கள் அல்ல; அவர்கள் ‘இந்து-ஸ்தான்’ மோடி அரசாங்கத்தை அழிப்பார்கள் என்ற வாசகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகரம் முழுவதும் பரவலான அச்சுறுத்தலை சுட்டிக்காட்டிய இந்த மின்னஞ்சல், குடியிருப்பாளர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அந்நகர் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

மேலும் இந்த மிரட்டல் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b