Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 06 ஏப்ரல் (ஹி.ச.)
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக மகேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
தேர்தல் விதிகளின்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.
அதன்படி, அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.
மேயர் பதவி காலியானதைத் தொடர்ந்து, மாநகராட்சி சட்ட விதிமுறைகளின்படி துணை மேயராகப் பணியாற்றி வந்த மேரி பிரின்சி லதா, இன்று முதல் மாநகராட்சியின் பொறுப்பு மேயராகப் பணிகளைத் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் அவர் முறைப்படி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b