Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 07 ஏப்ரல் (ஹி.ச.)
கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்ற பிரச்சாரம் இன்று மாலை நிறைவடைகிறது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டும். இதனால் இன்று மாலை 6 மணிக்குப் பிறகு எந்த அரசியல் கட்சிகளும் அல்லது வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது.
இந்த மூன்று மாநிலங்களிலும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கேரளாவில் 140 தொகுதிகள், அசாமில் 126 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
கடைசி நாளான இன்று பல முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களின் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வாக்காளர்களை கவர முயன்றனர்.
பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், வாக்காளர்கள் தங்களின் முடிவை எடுக்க வேண்டிய அமைதிக் காலம் தொடங்கியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam