Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 07 ஏப்ரல் (ஹி.ச.)
மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு வாக்காளர்களிடையே வலுப்பெற்று வரும் ஆட்சியாளர் எதிர்ப்பு மனநிலையை சுட்டிக்காட்டி, கேரளாவில் அடுத்த அரசாங்கத்தை ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூடிஎஃப்) அமைக்கும் என்ற நம்பிக்கையை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வெளிப்படுத்தினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கேரளாவின் 59 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களில் தாம் பங்கேற்றதாகவும், அங்கு மக்களிடையே நிலவும் அரசாங்க எதிர்ப்பு மனநிலையை நேரடியாக உணர்ந்ததாகவும் தெரிவித்தார். இந்த நிலைமை யூடிஎஃப் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை வலுப்படுத்துகிறது என்றார்.
மேலும், தன்னுடைய கருத்துக்கள் எந்த தனிப்பட்ட அரசியல்வாதியையும் குறிவைத்து அல்ல என்றும், தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் வெளிப்படுத்தும் மதிப்பீட்டின் பிரதிபலிப்பே எனவும் அவர் விளக்கமளித்தார்.
நான் ஒரு போதும் தனி நபர்களை குறிவைத்து அரசியல் செய்வதில்லை. ஆனால், அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீது மக்களிடையே தெளிவான எதிர்ப்பு மனநிலை உருவாகியுள்ளது என்று தரூர் குறிப்பிட்டார்.
அரசாங்கத் திட்டங்கள் நடைமுறைக்கு வரும் வேகத்தையும் அவர் கேள்விக்குட்படுத்தினார்.
திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்கும், அவை நிறைவு பெறும் காலத்திற்கும் இடையிலான பெரும் தாமதங்களை சுட்டிக்காட்டிய அவர், ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டிய திட்டங்கள், பத்து ஆண்டுகள் கழித்து தான் நிறைவு பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் முன்னேற்ற அறிக்கையே கூறுகிறது என்று விமர்சித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM