நாட்டிற்கு முன்னுதாரணமாக ஆந்திரப் பிரதேச பேரிடர் மேலாண்மை துறை – சந்திரபாபு நாயுடு உறுதி
ஆந்திரா 08, (ஹி.ச) ஆந்திர பிரதேச மாநிலம் அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய மேம்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்களை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தத் துறையின் மேம்பாட்டிற்காக ரூ.252.93 கோடி மதிப்பில
சந்திரபாபு நாயுடு


ஆந்திரா 08, (ஹி.ச)

ஆந்திர பிரதேச மாநிலம் அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய மேம்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்களை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தத் துறையின் மேம்பாட்டிற்காக ரூ.252.93 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் முதல் கட்டமாக ரூ.33.25 கோடி மதிப்பில் 25 நவீன தீயணைப்பு வாகனங்கள், 40 விரைவு பதில் அளிக்கும் வாகனங்கள், 50 காற்று நிரப்பப்படும் படகுகள், 30 சுவாச கருவி அமைப்புகள் உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்,

மக்களின் உயிரைக் காப்பது தான் முக்கிய நோக்கம் என்று வலியுறுத்தினார்.

வளர்ந்து வரும் அமராவதி நகரம் மற்றும் உயரமான கட்டிடங்கள் அதிகரித்து வருவதால், தீயணைப்பு துறைக்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் அவசியம் என்றும் அவர் கூறினார்.

மேலும், விபத்துகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் முக்கியம் என அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P