ஆந்திர பிரதேசத்தில் இ-பேருந்துகள் விரைவில் அறிமுகம் - முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஆந்திர பிரதேசம் , 08 ஏப்ரல் (ஹ.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் சாலைகளை குழிகள் இல்லாமல் வலுவாக மேம்படுத்தவும், பொதுமக்கள் குறைந்த செலவில் பயணம் செய்யும் வகையில் மின்பேருந்துகளை அறிமுகப்படுத்தவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள
A


ஆந்திர பிரதேசம் , 08 ஏப்ரல் (ஹ.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் சாலைகளை குழிகள் இல்லாமல் வலுவாக மேம்படுத்தவும், பொதுமக்கள் குறைந்த செலவில் பயணம் செய்யும் வகையில் மின்பேருந்துகளை அறிமுகப்படுத்தவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு

அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அமராவதி செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தில் சாலை மற்றும் கட்டிடங்கள் (R&B), போக்குவரத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் அவர் பேசும்போது,

மாநிலத்தில் உள்ள 45,000 கிலோமீட்டர் நீளமான சாலைகளின் பராமரிப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

வெறும் பழுது பார்க்கும் பணிகள் மட்டுமின்றி, ஒவ்வொரு பகுதியின் புவியியல் தன்மைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்து, அதற்கேற்ற தரமான சாலைகள் அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேம்பட்ட சாலைகள் மூலம் மக்களுக்கு அடிப்படை வசதிகள் எளிதில் கிடைக்கும் என்றும், அதனால் மாநிலத்தின் வளர்ச்சி வேகமாகும் என்றும் அவர் கூறினார்.

மேலும், பொதுப் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தும் நோக்கில், பொதுமக்களின் செலவை குறைக்கும் வகையில் மின்பேருந்துகளை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பிசி ஜனார்த்தன் ரெட்டி, மண்டிப்பள்ளி ராம்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA