Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச.)
ஆஸ்பென் மரம் ஒரு தோப்பு போல காணப்படும்.
ஒரு ஆஸ்பென் மரம் வேரில் இருந்து அதிகபட்சமாக 10 வேர்ச் செடிகள் முளைக்கும்.
அந்த வேர்ச் செடிகளும் பல வேர்ச்செடிகளை உருவாக்கி அந்த மரம் ஒரு தோப்பாக காணப்படும்.மிக வேகமாக வளரும் முதல் 10 மரங்களில் இந்த மரமும் இடம்பெற்றுள்ளது.
கோடை மற்றும் துளிர்விடும் காலத்தில் இந்த மரம் பசுமையான இலைகளுடன் காணப்படும்.
பின்னர் சிவப்பு, ஆரஞ்சு ஊதா, மஞ்சள் என இலைகள் அவ்வப்போது மாறி மாறி காணப்படும்.
இம்மரத்தின் இலைகள் முக்கோண வடிவமாகவோ அல்லது முட்டை வடிவமாகவோ இருக்கும்.
இந்த ஆஸ்பென் மரங்களுக்கு நிறைய குளிர் சூழ்நிலை தேவைப்படும்.
அதனால் நெருப்பால் இந்த மரம் பாதிக்காது எனக்கூட கூறலாம்.
இந்த மர விதையின் முளைப்புத் திறன் மிகவும் குறுகிய காலம்தான்.
உயரம் - 25 மீட்டர்.
Hindusthan Samachar / Durai.J