Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 08 ஏப்ரல் (ஹி.ச.)
கல்பாக்கத்தில் முன்மொழியப்பட்டுள்ள ஈனுலை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் கற்பாக்கம் பகுதியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள ஈனுலை திட்டம், சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதியில் வாழும் பொதுமக்களுக்கும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நிலத்தடி சுரங்கத் தோண்டுதல், பாறை வெடிப்பு போன்ற பணிகள் நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கக்கூடும். மேலும், குடிநீர் ஆதாரங்கள் மாசுபடும் அபாயமும் உள்ளது.
அதேபோல், கடலோர பகுதியாக இருக்கும் கற்பாக்கத்தில் இப்படியான பெரிய அளவிலான அறிவியல் திட்டத்தை அமைப்பது, அப்பகுதியின் இயற்கை சமநிலையை குலைக்கும் அபாயம் உள்ளது.
கடல் உயிரியல் அமைப்புகளும், சுற்றுச்சூழல் வளங்களும் பாதிக்கப்படக்கூடும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், இத்திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்து கேட்கப்படவில்லை என்றும், மக்களின் ஒப்புதல் இல்லாமல் இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவது ஜனநாயக விரோதமானது என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, கற்பாக்கத்தில் முன்மொழியப்பட்டுள்ள ஈனுலை திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam