கேரளாவில் இன்று கேரள சட்டப்பேரவை தேர்தல் - காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் வாக்குப் பதிவு
திருவனந்தபுரம், 09 ஏப்ரல் (ஹி.ச) கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டண
Congress MP Shashi Tharoor Cast


திருவனந்தபுரம், 09 ஏப்ரல் (ஹி.ச)

கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி என மும்முனைப்போட்டி நிலவுகிறது.

கேரள பேரவைத் தேர்தலில் 883 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

2.71 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 30,471 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்களும் வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் திருவனந்தபுரத்தில் இன்று வாக்கு செலுத்தினார்.

இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் திருவனந்தபுரத்தின் ஜவஹர் நகரில் உள்ள எல்.பி. பள்ளியில் வாக்களித்தார்.

Hindusthan Samachar / vidya.b