தமிழக கர்நாடக எல்லையில் இரு மாநில போலீசார் ஆலோசனை கூட்டம்
ஈரோடு, 09 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக–கர்நாடக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் இரு மாநில போலீசாரின் இணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் கோவை சரக டி.ஐ.ஜி. சுவாமிநாதன் தலைமையில
Border Police


ஈரோடு, 09 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக–கர்நாடக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் இரு மாநில போலீசாரின் இணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் கோவை சரக டி.ஐ.ஜி. சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது முக்கியமான பணியாக இருப்பதால், எல்லைப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக தாளவாடி, ஆசனூர் போன்ற பகுதிகளில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளை இரு மாநில போலீசாரும் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

வாக்குப்பதிவு நாளில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், தேர்தல் காலத்தில் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக மது பானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இதற்காக எல்லைப்பகுதிகளில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைத்து, வாகன சோதனைகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, சாம்ராஜ்நகர் மாவட்ட எஸ்.பி. முத்துராஜ் உள்ளிட்ட இரு மாநில போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்தனர்.

ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN