Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 09 ஏப்ரல் (ஹ.ச.)
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா மௌனம் காக்குவது வெட்கக்கேடானது என்று சிபிஐ தேசிய செயலாளர் கே. நாராயணா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இத்தகைய முக்கியமான சூழலில் எந்த நிலைப்பாடும் எடுக்காமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார்.
போர் காரணமாக நிரபராத பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் மௌனம் கேள்விக்குறியாக இருப்பதாக அவர் விமர்சித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளை சுற்றிப் பயணம் செய்து வருகிறார்.
ஆனால் இத்தகைய அவசரமான சூழலில் போரைக் கட்டுப்படுத்த இந்தியா முன்வரவில்லை என்றால், அந்த பயணங்களின் பயன் என்ன என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் கூட நடுவர் முயற்சியில் ஈடுபட முயற்சிக்கும் நிலையில், இந்தியா மௌனம் காக்கிறது என்பது ஆச்சரியமாக இருப்பதாக கூறினார்.
இக்கட்டான நேரத்தில் இந்தியா முன்னெடுத்து சமாதான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கலத்தில் இந்தியாவுக்கு இருந்த சர்வதேச மரியாதை மற்றும் செல்வாக்கு தற்போது குறைந்துவிட்டதாகவும், இது தலைமைத்துவ குறைபாடாகும் என்றும் கே. நாராயணா குற்றம்சாட்டினார்.
மேலும், சமாதானத்தை ஏற்படுத்த ஒரு முக்கிய வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA