விவசாயிகள் அனைவரும் ஐகேபி கொள்முதல் மையங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் – பல்லா ராஜேஷ்வர் ரெட்டி
தெலுங்கானா , 09 ஏப்ரல் (ஹி.ச.) தெலுங்கானா மாநிலம் ஜனகாமா தொகுதி குட்பட்டபெம்பர்த்தி, வட்லகொண்ட, எர்ரகொல்ல பஹாட் மற்றும் அடவி கேசவாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் தானியம் கொள்முதல் மையங்களை பிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏ பல்லா ராஜேஷ்வர் ரெட்டிதொடங்கி வைத்தார
T


தெலுங்கானா , 09 ஏப்ரல் (ஹி.ச.)

தெலுங்கானா மாநிலம் ஜனகாமா தொகுதி குட்பட்டபெம்பர்த்தி, வட்லகொண்ட, எர்ரகொல்ல பஹாட் மற்றும் அடவி கேசவாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் தானியம் கொள்முதல் மையங்களை பிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏ பல்லா ராஜேஷ்வர் ரெட்டிதொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தானியம் விற்பனைக்கு தொடர்பான எந்த சிக்கலும் ஏற்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.

விவசாயிகளின் பிரச்சினைகளை தொடர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று வருவதாகவும், கிராம வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பெண்கள் சுய உதவி குழுக்கள் மேலும் வலுப்பெற வேண்டும் என்றும், மில்லர்கள் விவசாயிகளை சிரமப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

மேலும், விவசாயிகள் தானியம் விற்ற பிறகு பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், அதனை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒவ்வொரு கொள்முதல் மையத்திலும் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.

ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்கவும், தேவையெனில் உயர் அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண்பேன் என்றும் தெரிவித்தார்.

ஜனகாமா தொகுதியில் உள்ள அனைத்து கொள்முதல் மையங்களிலும் விவசாயிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மார்க்கெட் தலைவர் பனுக் சிவராஜ் யாதவ், உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA