Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மே (ஹி.ச.)
19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ₹993 உயர்ந்துள்ளது. 5 கிலோ ஃப்ரீ டிரேட் எல்பிஜி (FTL) சிலிண்டரின் விலையும் உடனடியாக ₹261 உயர்த்தப்பட்டது.
ஆனால், வீட்டு உபயோக எல்பிஜி விலையில் எந்த மாற்றமும் இல்லை. சுமார் 33 கோடி குடும்பங்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ வீட்டு சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படவில்லை, தொடர்ந்து மானியத்துடன் வழங்கப்படுகிறது.
இந்த விலை மாற்றம் வணிக மற்றும் மொத்த எல்பிஜி பிரிவுகளுக்கு மட்டுமே பொருந்தும். இது இந்தியாவின் மொத்த எல்பிஜி நுகர்வில் ஒரு சிறிய பகுதியாகும்.
மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் விலை கடந்த சில வாரங்களாக நிலையற்றதாக உள்ள நிலையில் இந்த விலை மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியதை விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் இன்று அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,
ஏப்ரல் 29-ல் வாக்களித்தோம். மே 1-ல் விலை உயர்வு. வாக்குப்பதிவு முடிந்த மறுநாளே வணிக சிலிண்டர் விலை ₹70 உயர்வு.
தேர்தலுக்கு முன்: மௌனம்.
தேர்தலுக்குப் பின்: 19 கிலோ வணிக சிலிண்டருக்கு ₹70 உயர்வு.
இனி சிறு உணவகங்கள், தேநீர் கடைகள் மற்றும் வியாபாரிகள் விலையை உயர்த்துவார்கள்.
ஆனால் அதானியின் பேரரசு தொடர்ந்து வளர்கிறது.
இது தற்செயல் அல்ல. இது ஒரு வழக்கம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b