மேற்கு ஆசியா பதற்றம் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அமைச்சர்கள் குழு கூட்டம்
புதுடெல்லி, 11 மே (ஹி.ச.) மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை ஆய்வு செய்வதற்காக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் முறைசாரா அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழுவின் (IGoM) முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று (மே ) கா
Meeting of the Group of Ministers


புதுடெல்லி, 11 மே (ஹி.ச.)

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை ஆய்வு செய்வதற்காக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் முறைசாரா அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழுவின் (IGoM) முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று (மே ) காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது.

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நாளுக்கு நாள் மாறிவரும் பாதுகாப்பு சூழல், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு, வர்த்தக வழித்தடங்கள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்களின் நலன் ஆகியவற்றில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய பதற்றங்கள் அதிகரித்து வரும் இந்த சூழலில் பொருளாதார வலிமையை பேணுவதற்கான கூட்டு இயக்கத்தில் மக்கள் அனைவரும் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மேலும் சர்வதேச மோதல்களால் உலகளாவிய விநியோக சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றை சுட்டிக்காட்டிய பிரதமர், தற்போதைய நெருக்கடி என்பது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் குணநலனுக்கும் விடப்பட்ட சோதனை என்று குறிப்பிட்டார்.

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை மற்றும் கப்பல் போக்குவரத்து செலவுகள் உயர்ந்து வருகின்றன.

இது இந்தியாவின் பணவீக்கம் மற்றும் இறக்குமதி செலவினங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்திய கடற்படை ஏற்கனவே அரபிக் கடல் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b